பல்லவி
ஸாமி நின்னே நம்மிதிரா
ராரா 1முத்3து3 குமாரா (ஸாமி)
அனுபல்லவி
நா மீத3 த3ய ஜூசி
நன்னு ரக்ஷிம்பரா வேக3மே
தாமஸமு ஜேஸிதே நிமிஷ(மி)க
தாள ஜால(ன)ய்யா முத்3(த3)ய்யா (ஸாமி)
சரணம்
சரணம் 1
நீ மஹிமலு 2ப்3ரஹ்(மா)து3ல(னி)ஞ்சி
நிர்ணயிம்ப தர(மௌ)னா
பாமரு நேனு பொக3ட3 தரமா
பதித பாவன ஷ(டா3)னன
நா மனவி வினரா அனயமு நீ
நாமமே ஜபமுரா க3ம்பீ4ரா
பூ4மிலோ நீ ஸாடி தை3வ(மெ)வடு3
நீவே மஹானுபா4வ நன்னு ப்3ரோவு (ஸாமி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாமி/ நின்னே/ நம்மிதிரா/
சாமீ/ உன்னையே/ நம்பினேனய்யா/
ராரா/ முத்3து3/ குமாரா/ (ஸாமி)
வாருமய்யா. முத்துக் குமாரா!
அனுபல்லவி
நா/ மீத3/ த3ய/ ஜூசி/
என்/ மீது/ தயை/ செய்து/
நன்னு/ ரக்ஷிம்பரா/ வேக3மே/
என்னை/ காப்பாயய்யா/ விரைவாக/
தாமஸமு/ ஜேஸிதே/ நிமிஷமு/-இக/
தாமதம்/ செய்தால்/ நிமிடமும்/ இனி/
தாள/ ஜாலனு/-அய்யா/ முத்3து3/-அய்யா/ (ஸாமி)
பொறுக்க/ இயலேன்/ அய்யா/ முத்து/ அய்யா/
சரணம்
சரணம் 1
நீ/ மஹிமலு/ ப்3ரஹ்மா/-ஆது3ல-உஞ்சி/
உனது/ மகிமைகள்/ பிரமன்/ முதலானோராலும்/
நிர்ணயிம்ப/ தரமு/-ஔனா/
நிர்ணயிக்க/ தரம்/ ஆகுமா/
பாமரு/ நேனு/ பொக3ட3/ தரமா/
அறிவிலி/ நான்/ (உன்னை) போற்ற/ தரமா/
பதித/ பாவன/ ஷட்3/-ஆனன/
வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோனே/ ஆறு/ முகத்தோனே/
நா/ மனவி/ வினரா/ அனயமு/ நீ/
எனது/ வேண்டுகோளினை/ கேளுமய்யா/ இடைவிடாது/ உனது/
நாமமே/ ஜபமுரா/ க3ம்பீ4ரா/
நாமமே/ ஜபிக்கின்றேனய்யா/ கம்பீரமானவனே/
பூ4மிலோ/ நீ/ ஸாடி/ தை3வமு/-எவடு3/
புவியில்/ உனக்கு/ ஈடு/ தெய்வம்/ யார்/
நீவே/ மஹானுபா4வ/ நன்னு/ ப்3ரோவு/ (ஸாமி)
நீயே/ பெருந்தகையாம்/ என்னை/ காப்பாய்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ப்3ரஹ்மாது3லனிஞ்சி - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல், 'ப்3ரஹ்மாது3ல+உஞ்சி' என்று பிரிக்கப்படும். எனவே இது, 'ப்3ரஹ்மாது3லனுஞ்சி' என்றிருக்கவேண்டும். ஆனால், பேச்சு வழக்கில், 'ப்3ரஹ்மாது3லனிஞ்சி' என்று பயன்படுத்தப்படுகின்றது. அங்ஙனமே, இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.
8 - தீ4ர ரண வீர - தீ4ர ரண தீ4ர : 'தீ4ர' என்ற சொல் மறுபடியும் பயன்படுத்தப்பட்டிருக்காது என்று கருதுகின்றேன். ஆனால், 'ரண தீ4ர' என்பது சரியான சொல்லாகும்.
9 - வைத்3யேஸு1 - வைத்3யேஸு : இச்சொல், 'வைத்3ய+ஈஸு1' என்று பிரிக்கப்படும். எனவே, 'வைத்3யேஸு1' என்பதுதான் சரியென்று நான் கருதுகின்றேன்.
Top
மேற்கோள்கள்
1 - முத்3து3 குமாரா - முத்துக் குமார - வைத்தீசுவரன் கோவில் முருகன் பெயர். தீட்சிதர், தமது 'ப4ஜரே சித்த பா3லாம்பி3காம்' என்ற கல்யாணி ராக கீர்த்தனையில், 'முத்3து3 குமார' என்று குறிப்பிடுகின்றார்.
3 - ஸந்தாப - கொடிய வெம்மைகள் - ஆத்4யாத்மீக, ஆதி4-தெ3ய்வீக, ஆதி4-பௌ4தீக எனப்படும், தன்னால் - கடவுளரால் - இயற்கையால் உண்டாகும் முவ்வெம்மைகளைக் குறிக்கும்.
8 - ரண வீர - போரில் வீரன் - முருகன், அசுரர்களை எதிர்த்த போரில், தேவர் படைகளுக்கு சேனாபதியாம்.
Top
விளக்கம்
4 - ஸம்மோஹன கலா வித்4ரு2த - மயக்குவிக்கும் களையுடைத்தவன் - தமிழில், 'முருகு' என்றால் 'அழகு', 'இளமை' என்று பொருளாகும் - எனவே 'முருகன்'.
5 - ஸ்ரீ-பதி பத3 விதி3த - மா மணாளன் திருவடி யறிவோன் - விஷ்ணு ஸூக்தத்தினில் 'சூரர்கள் (அறிஞர்கள்) அந்த விஷ்ணுவின் திருவடியினை எவ்வமயமும் காண்கின்றனர்' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், முருகன், விஷ்ணுவின் மருகன் - இரண்டு வகையில் - முருகனின் தாயாரான பார்வதி, விஷ்ணுவுக்குத் தங்கை. அத்துடன், முருகனின் இரு மனைவியரும், முற்பிறவியில், விஷ்ணுவின் பெண்கள் எனப்படும். முருகனின் மனைவியர் நோக்கவும். ஆனால், வட இந்தியாவில், 'சுப்பிரமணியன்' திருமணமாகாதவராக வழிபடப்படுகின்றார்.
6 - வேதா3ந்த ரூப - வேதாந்த உருவினன். முருகன், தந்தைக்கு, பிரணவ மந்திரத்தினை உபதேசம் செய்து, 'தகப்பன் சாமி' என்று பெயர் பெற்றான். முருகன் வழிபாடு நோக்கவும்.
Top
7 - கோடி மன்மதா2ங்க3 ஜித - கோடி மன்மதர்களை உருவில் வென்றவன். முருகனுக்கு, 'குமாரன்' என்றும் பெயருண்டு. மன்மதனுக்கு, 'மாரன்' என்றும் பெயராகும். காஞ்சி மாமுனிவர் தமது உரையில் 'குமாரன்' என்பதற்கு, 'மாரனைப் பழித்தவன்' (குத்ஸித மார - குமார) என்று விளக்கம் கூறுகின்றார்.
9 - வைத்3யேஸு1 - வைத்திய ஈசன் - வைத்தீசுரவன் கோவில் ஈசன் - இங்கு முருகனைக் குறிக்கும். ஆனால், 'வைத்திய ஈசன்' என்பதற்கு, 'நோய் நீக்க வல்லோன்' என்று பொருள் கொள்ளலாம். இங்கு குறிக்கப்படும் நோய், உடல் நோயல்ல - பிறவியெனும் நோய்.
மாமணாளன் - அரி
Top